உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திடக்கழிவு மேலாண்மை திணறும் உள்ளாட்சிகள்

திடக்கழிவு மேலாண்மை திணறும் உள்ளாட்சிகள்

திருப்பூர், : மக்காத பொருட்கள் குப்பையுடன் கலந்து சேகரிக்கப்படுகிறது. இவற்றை தரம் பிரிப்பதற்குரிய இடம் இல்லை. இத்தகைய பணிகளை மேற்கொள்ள போதிய துாய்மைப்பணியாளர்களும் இல்லை என்பதுதான் மாவட்டத்தில் உள்ள யதார்த்த நிலை.தொழில்துறையினர் மற்றும் அரசுத்துறையினர் விழிப்புணர்வுடன் செயல்பட்டதால், திருப்பூரில் 'பசுமை' தழைத்தோங்கியுள்ளது. ஆனால், மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில், குப்பைகள் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் இருப்பதில்லை. மேலும், உள்ளாட்சி நிர்வாகங்களும் இதில் அலட்சியமாக உள்ளன.மாவட்டத்தில், பெயரளவில் நடைமுறையில் இருக்கும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடர்பான விழிப்புணர்வு, தற்போது அதிகரிக்க துவங்கியுள்ளது. ''வீடுகளில் இருந்து வெளியேறும் குப்பைகளில், பெருமளவு மறுசுழற்சி செய்வதற்குரியது; அதை மக்களே தரம் பிரித்து, வருவாய் ஈட்டிக்கொள்ள முடியும்'' என, யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.துாய்மைப்பணியாளர்எண்ணிக்கை போதாதுஉள்ளாட்சிகளில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் என்பது, முழு அளவில் இல்லை; சில இடங்களில் பெயரளவில் கூட இல்லை. உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் வீடு, வீடாக தினசரி குப்பை சேகரிக்கப்பட்டாலும், அவற்றை சேகரித்து வைத்து, தரம் பிரித்து அகற்ற போதிய இடமில்லை. அவ்வாறு இடமிருப்பினும், அத்தகைய பணிகளை மேற்கொள்ள துாய்மைப் பணியாளர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லைமறுசுழற்சிக்குபயன்படுத்தலாம்திடக்கழிவு மேலாண்மை திட்ட ஆலோசகர் வேலுார் சீனிவாசன் கூறியதாவது:பாலிதீன் பொருட்களை மறுசுழற்சி செய்யும் தொழில், ஆங்காங்கே நடந்து வரும் நிலையில், வீடுகளில் சேகரமாகும் பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் தொடர்புடைய பொருட்களை, மறுசுழற்சி விற்பனைக்கு வழங்கி, வருவாய் ஈட்டிக் கொள்ள குடியிருப்புவாசிகள் முன்வர வேண்டும். பாலிதீன் பொருட்கள் மட்டுமின்றி, காய்கறி கழிவு, இறைச்சிக்கழிவு உள்ளிட்டவற்றை கூட, மறுசுழற்சி வாயிலாக மாற்று பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்த முடியும். அந்த வகையில், தினசரி பயன்படுத்தும் பாலிதீன் மற்றும் பாலிதீன் அல்லாத பொருட்கள், பாட்டில், கவர் உட்பட, 171 பொருட்களை மறுசுழற்சி பயன்பாட்டுக்கென விற்பனை செய்து, அதில் வருவாய் ஈட்ட முடியும். 15 பொருட்களை மட்டும் தான் மறுசுழற்சிக்கு பயன்படுத்த முடியாது. இதுகுறித்த விழிப்புணர்வு மற்றும், புரிதல் மக்களிடம் வந்துவிட்டால், துாய்மைப்பணி எளிதாகும்.---பாலத்தின் கீழ் நல்லாற்றில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகள்.அவிநாசி - கோவை பைபாஸ் சாலை.

மக்காத பொருட்கள்

குப்பையுடன் கலப்புதிருப்பூர் மாநகராட்சியை பொறுத்தவரை, குப்பைகளை கொட்ட பாறைக்குழிகளை நாடிச் செல்ல வேண்டியிருக்கிறது. இதற்கு, மக்கள் மத்தியில் எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. 'பொதுமக்கள், குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என, தரம் பிரித்து வழங்க வேண்டும்' என, மேயர் அறிவுறுத்தியுள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய விழிப்புணர்வு வழங்கப்பட்டாலும், பொதுமக்கள் அதை பின்பற்றுவதாக இல்லை; உள்ளாட்சி நிர்வாகங்களால், இது, கண்காணிக்கப்படுவதும் இல்லை.வீடுகளில், தினசரி பயன்பாட்டில் உள்ள பாலிதீன் கவர், பிளாஸ்டிக் பாட்டில் உள்ளிட்ட பொருட்களை, பொது மக்கள், குப்பையோடு குப்பையாக கலந்து விடுகின்றனர். இதுவும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாகி விடுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை