உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உங்களைத் தேடி; உங்கள் ஊரில் கலெக்டர் இன்று பங்கேற்பாரா?

உங்களைத் தேடி; உங்கள் ஊரில் கலெக்டர் இன்று பங்கேற்பாரா?

பல்லடம் : 'உங்களை தேடி; உங்கள் ஊரில்' எனும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், மாதம் ஒரு நாள், தாலுகா அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபடுவர். பல்லடம் தாலுகாவில் நேற்று 'உங்களை தேடி; உங்கள் ஊரில்' முகாம் நடப்பதாகவும், காலை 9:00 மணி முதல், அரசு அலுவலகங்கள் பலவற்றிலும் கலெக்டர் ஆய்வு செய்ய உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.அனைத்து அரசு அலுவலகங்களும் துாய்மைப்படுத்தப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், அறிவித்தபடி கலெக்டர் வரவில்லை. மாலை 4:30 மணியளவில், கலெக்டர், தாலுகா அலுவலகம் வந்தார். கலெக்டர், பல்லடத்தில் தங்கி, இன்று காலை மீண்டும் ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை