உள்ளூர் செய்திகள்

கணித தின நிகழ்வு

திருப்பூர், செல்லப்பபுரம் நடுநிலைப்பள்ளியில், கணித தின நிகழ்வு நடந்தது. மங்கை பாரதி பதிப்பகம் கந்தசாமி, தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியை புவனேஸ்வரி, இந்திய கணித மேதை சீனிவாச ராமானுஜன் குறித்து பேசுகையில், ''1914 முதல், 1918 இடைபட்ட காலத்தில் எண்ணற்ற புதுக்கணித தோற்றங்களை கண்டுபிடித்தார். இவரது கணித திறன், அடிப்படை இயற்பியல் துறை முதற்கொண்டு, மின் தொடர்பு பொறியியல் வரை பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது,'' என்றார். உதவி தலைமையாசிரியர் சுமதி, நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை