கோப்பையை தட்டித்துாக்கிய பல்லடம் கபடி அணி
பல்லடம் : பி.ஜி., கபடி விளையாட்டு கழகம், பல்லடம் தமிழ் சங்கம் சார்பில், இரண்டாம் ஆண்டு தொடர் கபடி போட்டி, பல்லடம் மணிவேல் மஹால் திருமண மண்டப வளாகத்தில் நடந்தது.இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 80 அணிகள் பங்கேற்றன. நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதிப் போட்டியில், பல்லடம் கபடி கழகம், 24:17 என்ற புள்ளிக் கணக்கில், குமாரபாளையம் அணியை வென்றது.'டாஸ்' முறையில் பி.ஜே., பிரதர்ஸ் அணி மூன்றாம் இடமும், ஓம் முருகா கேட்டரிங் அணி நான்காம் இடமும் பிடித்தன. பரிசளிப்பு விழாவுக்கு, தமிழ்ச்சங்கத் தலைவர் கண்ணையன் தலைமை வகித்தார். தி.மு.க., நகர செயலாளர் ராஜேந்திரகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, அணிகளுக்கு பரிசளித்தர். நண்பர்கள் கால்பந்து குழு செயலாளர் திருமூர்த்தி ஒருங்கிணைத்தார்.