ஓய்வூதியர் போராட்டம்
- நமது நிருபர்-108 மாத நிலுவை டி.ஏ., உயர்வு, 21 மாத கால நிலுவை தொகை, ஓய்வு பெறும் நாளில் பணப்பலன், குடும்ப ஓய்வூதியருக்கு மருத்துவப்படி, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில், வாயில் கருப்பு துணிகட்டி போராட்டம் திருப்பூர் மண்டல அலுவலகம் முன் நடந்தது. 51 பெண்கள் உட்பட, 200க்கும் மேற்பட்டோர் வாயில் கருப்பு துணி கட்டியபடி போராட்டத்தில் பங்கேற்றனர்.