மேலும் செய்திகள்
பசுமையின் வலிமை; ஓங்கி வளரும் தேக்கு
23-Dec-2024
திருப்பூர்; 'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், எரிசனம்பாளையத்தில், 300 மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது.'வெற்றி' அறக்கட்டளை சார்பில் செயல்படுத்தப்படும், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், 21 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள், எதிர்பார்த்ததை காட்டிலும் அதிக விருப்பத்துடன் மரக்கன்று நட்டு வருகின்றனர். இதனால், 3.40 லட்சம் என்ற எண்ணிக்கையை கடந்து, மரக்கன்று நடும் பணி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், வெள்ள கோவில் அருகே மூலனுார் எரிசனம்பாளையத்தில், பாக்கியாத்தாள் என்பவரின் தோட்டத்தில் நேற்று மரக்கன்று நடப்பட்டது. மொத்தம், 300 தேக்கு மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது. 'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், பயனுள்ள மரக்கன்றுகள் நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் அணுகலாம் என, திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
23-Dec-2024