நடுவேலம்பாளையத்தில் மரக்கன்றுகள் நடவு
திருப்பூர்; வெற்றி அறக்கட்டளையின், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், பசுமை பரப்பை விரிவாக்கும் வகையில், மரம் வளர்க்கும் திட்டம், 2015 முதல் செயல்படுத்தப்படுகிறது. விவசாய நிலங்களில், விவசாயிகள் மரம் வளர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். பல்லடம், நடுவேலம்பாளையம் பகுதியில் உள்ள வடிவேல் என்பவருக்கு சொந்தமான, கிழுவங்காடு தோட்டத்தில். நேற்று மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. வேப்ப மரக்கன்று -50, சொர்க்கமரம், புங்கன், நாவல் உள்ளிட்ட மரக்கன்றுகள் 50 என, 100 மரக்கன்றுகள் நடப்பட்டது. 'வனத்துக்குள் திருப்பூர்-11' திட்டத்தில் மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் அணுகலாம் என, திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.