உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மானியத்தில் உலர் தீவனம் கால்நடைத்துறைக்கு கோரிக்கை

மானியத்தில் உலர் தீவனம் கால்நடைத்துறைக்கு கோரிக்கை

உடுமலை,; உலர் தீவன தட்டுப்பாட்டை தவிர்க்க, கால்நடைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உடுமலை பகுதி கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலை சுற்றுப்பகுதிகளில், பால் உற்பத்திக்காக கால்நடைகள் அதிகளவு வளர்க்கப்படுகிறது. உலர் மற்றும் பசுந்தீவனம் தட்டுப்பாடு ஏற்படும் போது, கால்நடைகளின் பால் திறன் குறைந்து விடும். எனவே, உலர் தீவனமான வைக்கோல், மக்காச்சோள தட்டு ஆகியவற்றை கால்நடை வளர்ப்போர் இருப்பு வைப்பது வழக்கமாகும். தற்போது, கால்நடை வளர்ப்போர், பிற மாவட்டங்களில் இருந்து அதிக செலவிட்டு, வைக்கோலை கொண்டு வரும் நிலை உள்ளது. கால்நடை வளர்ப்போர் கூறியதாவது: உலர் தீவனத்தை பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வர, அதிக செலவாகிறது. எனவே, பலர் கால்நடை வளர்ப்பை கைவிடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். கால்நடைத்துறை சார்பில், முன்பு, உலர் தீவன கிடங்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. அதன்படி, கால்நடை மருந்தகங்களில், உலர் தீவனமான வைக்கோல் பிற மாவட்டங்களில் இருந்து பெறப்பட்டு, மானிய விலையில், வழங்கப்பட்டது. இத்திட்டத்தை ஆண்டு முழுவதும் செயல்படுத்தினால், அனைத்து கால்நடை வளர்ப்போருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை