ஸ்மார்ட் மாடர்ன் பள்ளியில் சகோதயா எறிபந்து போட்டி
திருப்பூர்; திருப்பூர், அம்மாபாளையத்திலுள்ள ஸ்மார்ட் மாடர்ன் பள்ளியில், சகோதயா கூட்டமைப்பு பள்ளி (சி.பி.எஸ்.இ.,) சார்பில் எறிபந்து போட்டி நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் உள்ள 30 பள்ளிகள் பங்கேற்றன. போட்டியில், 800 பேர் பங்கேற்றனர். போட்டியில் வெற்றிபெற்ற மாணவியருக்கு, ஸ்மார்ட் மாடர்ன் பள்ளி அறங்காவலர் நடராஜன், பள்ளி துணை முதல்வர் பிரேமலதா ஆகியோர், பரிசு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி, பாராட்டினர்.