உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பயிர் சாகுபடிக்கு உரங்கள் விதைகள் இருப்பு திருப்தி

பயிர் சாகுபடிக்கு உரங்கள் விதைகள் இருப்பு திருப்தி

உடுமலை; பயிர் சாகுபடிக்கு தேவையான விதைகள் மற்றும் உரங்கள் இருப்பு உள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.திருப்பூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை பொழிவு, 618.20 மி.மீ., ஆகும். ஜன., மாத சராசரி மழை அளவு 7.10 மி.மீ., ஆக உள்ள நிலையில், நடப்பாண்டு, 14.75 மி.மீ., மழை பெய்துள்ளது. சராசரியை விட, கூடுதலாக, 7.65 மி.மீ.,மழை கிடைத்துள்ளது.பயிர் சாகுபடிக்கு தேவையான நெல் மற்றும் பிற பயிறு வகை தானியங்கள் விதைகள் போதிய அளவு இருப்பில் உள்ளது. நெல் 12.66 டன், தானிய பயிறுகள் 34.55 டன், பயறு வகை பயிறுகள் 12.98 டன் மற்றும் எண்ணெய் வித்து பயிர் விதைகள் 12.66 டன் இருப்பு உள்ளது.மேலும், பயிர் சாகுபடிக்கு தேவையான, யூரியா, பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களும் போதிய அளவு இருப்பு உள்ளது.மாவட்டத்தில், யூரியா 2, 935 டன், டி.ஏ.பி., 867 டன், காம்ப்ளக்ஸ் உரம், 3, 672 டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட், 882 டன் இருப்பு உள்ளது, என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை