உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பள்ளி, கல்லுாரி மாணவர்கள் திருக்குறள் முற்றோதல்

பள்ளி, கல்லுாரி மாணவர்கள் திருக்குறள் முற்றோதல்

பல்லடம்:பல்லடம், சித்தம்பலம், நவக்கிரக கோட்டையில், அட்சரம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில், திருக்குறள் முற்றோதல் நடந்தது. கோவை காமாட்சிபுரி ஆதினம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமை வகித்து பேசுகையில், ''மனிதன் தன்னை நெறிப்படுத்திக் கொள்ள திருக்குறள் உதவும். பிறரிடத்தில் அன்பாக பேசு; பொய் பேசாதீர். உண்மையாக இருக்க வேண்டும். தாய், தந்தையர், ஆசிரியரை மதிக்க வேண்டும். அறவழியில் பயணிக்க வேண்டும் என்பதை திருக்குறள் எடுத்துரைக்கிறது,'' என்றார். நுாற்றுக்கணக்கான பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்று, திருக்குறளை, பொருளுடன் வாசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை