உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நிதி முதலீடு விழிப்புணர்வு கல்லுாரியில் கருத்தரங்கம்

நிதி முதலீடு விழிப்புணர்வு கல்லுாரியில் கருத்தரங்கம்

உடுமலை : உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், நிதி முதலீடு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், மாணவர்களுக்கான நிதி முதலீடு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. இதில், கல்லுாரி முதல்வர் கல்யாணி தலைமை வகித்தார்.தொழில்நுட்ப வல்லுநர் மணிராம் பங்கேற்று, 'பணவீக்கம், அதற்கான தீர்வு, சேமிப்பு - முதலீடு, பங்குச்சந்தை, பாதுகாப்பான சேமிப்பு முதலீட்டு திட்டங்கள் குறித்து பேசினார். பேராசிரியர்களுடன் நிதி முதலீடு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடந்தது. மாணவர்களுடன், பேராசிரியர்கள், துறைத்தலைவர்களும் கருத்தரங்கில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை