மேலும் செய்திகள்
தமிழ் கூடல் விழா போட்டி; மாணவர்களுக்கு சான்றிதழ்
16-Aug-2025
உடுமலை: பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடந்தது. உடுமலை அருகே உள்ள பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த, இவ்விழாவில் பள்ளி தலைமையாசிரியர் பாபு தலைமை வகித்தார். தமிழாசிரியர் முனியப்பன் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத்தலைவர் மோகனா, 'கல்வியும் முக்கியத்துவமும் ' என்ற தலைப்பில் பேசினார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர் சத்தியவாணி நன்றி தெரிவித்தார். மாணவி தனுஸ்ரீ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
16-Aug-2025