உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் விழா

அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் விழா

உடுமலை: பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடந்தது. உடுமலை அருகே உள்ள பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த, இவ்விழாவில் பள்ளி தலைமையாசிரியர் பாபு தலைமை வகித்தார். தமிழாசிரியர் முனியப்பன் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத்தலைவர் மோகனா, 'கல்வியும் முக்கியத்துவமும் ' என்ற தலைப்பில் பேசினார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர் சத்தியவாணி நன்றி தெரிவித்தார். மாணவி தனுஸ்ரீ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ