உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருவாசகம் முற்றோதல்; சிவனடியார்கள் பரவசம்

திருவாசகம் முற்றோதல்; சிவனடியார்கள் பரவசம்

திருப்பூர்; திருப்பூர் மாணிக்கவாசகர் மன்றம் சார்பில், திருவாசகம் முற்றோதல் நேற்று, விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நடந்தது.திருப்பூர் மாணிக்கவாசகர் மன்றம் மற்றும் அர்த்தசாம பூஜை அடியார்கள் திருக்கூட்டம் சார்பில், திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், மாதத்தின் 3 வது திங்கட்கிழமை திருவாசகம் முற்றோதல் நடத்தப்படுகிறது. அதன்படி, நேற்று சிறப்பு வழிபாட்டுடன், திருவாசக முற்றோதல், காலை, 8:00 மணிக்கு துவங்கியது. சிவனடியார்கள் கூட்டாக சேர்ந்து, கை தாளம் இசை மற்றும் பண்ணிசையுடன் பதிகங்களை பாராயணம் செய்தனர். நிறைவாக, மகாதீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை