உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / டூவீலர் - கார் மோதல்; 4 பேர் படுகாயம்

டூவீலர் - கார் மோதல்; 4 பேர் படுகாயம்

திருப்பூர்; திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி, செங்கப்பள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி, 40. இவரது மனைவி தமிழரசி, 35, மகன் கவினேஷ், 12 ஆகியோர் டூவீலரில் ஊத்துக்குளி - சென்னிமலை ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது, அவ்வழியாக வந்த கார், டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், டூவீலரில் சென்ற மூன்று பேருக்கும், காரில் வந்த விஜயலட்சுமி என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. காயம் அடைந்தவர்கள், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறு கின்றனர். புகாரின் பேரில், ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி