உத்தமலிங்கேஸ்வரர் கோவில் திருக்கல்யாண வைபவம்
அனுப்பர்பாளையம்; பெருமாநல்லுாரில் உள்ள, கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தமலிங்கேஸ்வரர்கோவிலில், சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.நேற்று இரவு 8:00 மணிக்கு உத்தம லிங்கேஸ்வரருக்கும், கோவர்த்தனாம்பிகைக்கும் திருமண வைபவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். இன்று மாலை 3:30 மணிக்கு தேர் வடம் பிடித்தல், நிகழ்ச்சி நடக்கிறது. 13ம் தேதி இரவு 8:00 மணிக்கு பரிவேட்டை, குதிரை வாகன நிகழ்ச்சி, 14ம் தேதி காலை 9:00 மணிக்கு நடராஜர் அபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன ஏற்பாடுகளை, கோவில் தக்கார் சபரீஷ்குமார், செயல் அலுவலர் சங்கர சுந்தரேஸ்வரன் ஆகியோர் செய்து வருகின்றனர்.