உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுகாதார நிலையத்துக்கு பூட்டு எப்போது மக்களுக்கு பயன்பாடு?   கழிவு வெளியேறுமா?

சுகாதார நிலையத்துக்கு பூட்டு எப்போது மக்களுக்கு பயன்பாடு?   கழிவு வெளியேறுமா?

திருப்பூர், நொய்யல் ஆற்றுப்பாலம் ரோடு - நடராஜ் தியேட்டர் ரோடு சந்திப்பில் மழைநீருடன், கழிவுநீரும் தேங்கியுள்ளது. துர்நாற்றம் வீசுவதால், கழிவுநீரை வெளியேற்ற வேண்டும்.- நடராஜன், கருவம்பாளையம். (படம் உண்டு)ஆபத்து நீங்குமா?திருப்பூர் நேரு வீதி - நஞ்சப்பா ஸ்கூல் சந்திப்பில் வாகன ஓட்டிகள் மீது உரசும் வகையில் கம்பிகள் நீட்டியபடி ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்படுகிறது.- வின்சென்ட்ராஜ், நஞ்சப்பா ஸ்கூல் வீதி. (படம் உண்டு)தொல்லை அகலுமா?நெருப்பெரிச்சல் ஜி.என்., கார்டனில் நாய்த்தொல்லை அதிகமாக உள்ளது. ரோட்டில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்துச் செல்ல வேண்டும்.- ரவி, ஜி.என்.கார்டன். (படம் உண்டு)சீர்கேடு ஒழியுமா?கே.செட்டிபாளையம், பழனியாண்டவர் நகரில் தேங்கியுள்ள குப்பைகளை அள்ள வேண்டும். தொட்டி அருகே குப்பை தேங்குவதால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.-- பழனிகுரு, பழனியாண்டவர் நகர். (படம் உண்டு)மரம் அகற்றப்படுமா?சூசையாபுரம், இரண்டாவது வீதியில் உள்ள மரம் வலுவிழந்து விழும் நிலையில் உள்ளது. விழுவதற்கு முன் மரத்தை வெட்டி அகற்ற வேண்டும்.- ராஜ், சூசையாபுரம். (படம் உண்டு)அடைப்பு நீங்குமா?திருப்பூர் அவிநாசி ரோடு, டீச்சர்ஸ் காலனி இரண்டாவது வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கியுள்ளது. சுத்தம் செய்ய வேண்டும்.- சபரீஷ், டீச்சர்ஸ் காலனி. (படம் உண்டு)பயன்பாடுக்கு வருமா?திருப்பூர், ஆறாவது வார்டு, பாலன் நகரில் மாநகராட்சி துணை சுகாதார நிலையம் திறக்கப்படாமல், பூட்டியே கிடக்கிறது. பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.- உதயகுமார், பாலன் நகர். (படம் உண்டு)வால்வு மாற்றப்படுமா?திருப்பூர், எட்டாவது வார்டு, கருப்பராயன் நகர் மூன்றாவது வீதியில் கேட்வால்வு பழுதாகி மின்கம்பம் அருகே பீய்ச்சியடித்தபடி தண்ணீர் வெளியேறுகிறது.-- சதாசிவம், கருப்பராயன் நகர். (படம் உண்டு)திருப்பூர், 32வது வார்டு, சூர்யா காலனியில் கேட்வால்வு பழுதாகியிருப்பதால், தண்ணீர் அடைத்த பின் தொடர்ந்து வீணாகிறது. கேட்வால்வை மாற்ற வேண்டும்.- தங்கமுத்து, சூர்யா காலனி. (படம் உண்டு)ரியாக் ஷன்சுத்தமானது பூங்காகரைப்புதுார் ஊராட்சி, அருள்புரம் 'அம்மா' பூங்காவில் மழையால் மரங்கள் சாய்ந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக 'தினமலர் 'நாளிதழில் செய்தி வெளியானது. சாய்ந்த மரங்களை வெட்டி அகற்றி, பூங்காவை சுத்தம் செய்து விட்டனர்.- உதயகுமார், அருள்புரம். (படம் உண்டு)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ