பச்சிளங்குழந்தை மீட்பு: உரிமை கோருபவர் யார்?
திருப்பூர்: தாராபுரம் அரசு மருத்துவமனையில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட, 31 நாட்களான பெண் குழந்தை, குழந்தைகள் நலக்குழுவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு உரிமை கோருபவர்கள், உரிய ஆவணங்களுடன், 30 நாட்களுக்குள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், 7வது தளம், கலெக்டர் அலுவலக வளாகம், திருப்பூர் என்ற முகவரியை (தொடர்பு எண்:0421 2971198) தொடர்பு கொள்ளலாம். யாரும் தொடர்புகொள்ளாவிடில், குழந்தைக்கு பெற்றோர் இல்லை என்று கருதி, சட்டப்படி தத்து வழங்கப்படுமென, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.