இளைஞர் எழுச்சி நாள் கொண்டாட்டம்
உடுமலை: உடுமலை எஸ்.கே.பி., மேல் நிலைப் பள்ளியில் இளைஞர் எழுச்சி நாள், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி இணைச் செயலர் கோபாலன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சுப்ரமணியம் முன்னிலை வகித்தார். ஆசிரியை பாலகாயத்ரி வரவேற்றார். கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அப்துல் ரகுமான், அறிவியல் விருதுகள், விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். ஆசிரியர்கள் இதயத்துல்லா, கவிதாமணி, கவிதா உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.