மேலும் செய்திகள்
குண்டாஸில் 6 பேர் கைது
02-Oct-2025
சில்மிஷ ஊழியர் போக்சோவில் கைது
29-Sep-2025
அருணாசலேஸ்வரர் கோவில் ஊழியரை கொல்ல முயற்சி
29-Sep-2025
போலீசாரை கொல்ல முயன்ற கஞ்சா கடத்தல் காரால் பகீர்
28-Sep-2025
செய்யாறு : திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்த நெடும்பிறை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ். கூலித் தொழிலாளியான இவரின் மகன்கள் பரத், 12, சந்தோஷ், 8. இருவரும் முறையே, 6ம் வகுப்பு மற்றும் 3ம் வகுப்பு படித்து வந்தனர். அதே கிராமத்தைச் சேர்ந்த உறவினர் முரளி கிருஷ்ணன் மகன் சாய்சரண், 10, ஐந்தாம் வகுப்பு மாணவன்.அப்பகுதியிலுள்ள குளத்தில் குளிக்க நேற்று மதியம் மூவரும் சென்றனர். நீச்சல் தெரியாத நிலையில் மூவரும் மூழ்கி இறந்தனர். குளத்தில் சிறுவன் உடல் மிதப்பதாக கிடைத்த தகவலின்படி, கிராம மக்கள் சேர்ந்து குளத்தில் இறங்கி தேடினர்.அப்போது பரத், சந்தோஷ், மற்றும் சாய்சரண் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர்.
02-Oct-2025
29-Sep-2025
29-Sep-2025
28-Sep-2025