உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / 7 வயது சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு 20 ஆண்டு

7 வயது சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு 20 ஆண்டு

வந்தவாசி:திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மேல்பாதிரி கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன், 23; பேக்கரி தொழிலாளி. இவர், 2018, அக்., 3ம் தேதி, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த, 7 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். வந்தவாசி அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து, மனோகரனை போக்சோவில் கைது செய்தனர். வழக்கு, திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்தது. மனோகரனுக்கு, 20 ஆண்டுகள் சிறை, 2,000 ரூபாய் அபராதம், கட்ட தவறினால் மேலும், ஓராண்டு சிறை தண்டனை விதித்து, நேற்று முன்தினம் நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை