உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / பெட்ரோல் குண்டு வீச்சில் பெண் குழந்தை படுகாயம்

பெட்ரோல் குண்டு வீச்சில் பெண் குழந்தை படுகாயம்

சந்தவாசல் : திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் காங்கிரானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ராசையா. இவரது மனைவி திவ்யா. இவர்கள் மகள் ஆஷிக், 3. வீட்டில் அனைவரும் துாங்கிக் கொண்டிருந்தபோது, நேற்று அதிகாலை, 2:00 மணியளவில் ராசையா வீட்டில், பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.தீப்பொறி விழுந்ததில், ஆஷிக் பலத்த காயமடைந்தார். ராசையா குழந்தையை மீட்டு வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். சந்தவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை