உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / பெண்கள் பள்ளியில் பிறந்த நாள் கொண்டாடிய சிறுவன் கைது

பெண்கள் பள்ளியில் பிறந்த நாள் கொண்டாடிய சிறுவன் கைது

செங்கம் : திருவண்ணாமலை அருகே, பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் பேனர் வைத்து, கேக் வெட்டி, பிறந்த நாள் கொண்டாடிய சிறுவனை, போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில், கடந்த சில நாட்களுக்கு முன், அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அப்பகுதியிலுள்ள கோவில் வளாகத்தில், வளையாம்பட்டை சேர்ந்த, 17, வயது சிறுவன், அனுமதியின்றி பிறந்த நாள் வாழ்த்து பேனர் வைத்தார். மேலும், பள்ளியிலும், கோவிலிலும் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடினார். இது குறித்து, செங்கம் போலீசார் நேற்று முன்தினம் இரவு சிறுவனை கைது செய்து, கடலுார் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை