மேலும் செய்திகள்
தி.மலையில் கூட்ட நெரிசல் பக்தர் பலி
26-Sep-2025
திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை சனி மகாபிரதோஷ பூஜை நடந்தது. இதையொட்டி, கோவில் ஆயிரங்கால் மண்டபம் அருகிலுள்ள பெரிய நந்தி, கிளி கோபுரம் அருகிலுள்ள அதிகார நந்தி, தங்க கொடிமரம் அருகிலுள்ள சிறிய நந்தி ஆகியவற்றிற்கு, பால், பன்னீர், அபிஷேக பொடி, மஞ்சள், தேன், பஞ்சாமிர்தம், விபூதி, இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை நடந்தது. அப்போது பக்தர்கள், 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என பக்தி கோஷமிட்டு வழிபட்டனர்.
26-Sep-2025