தரமற்ற நிலையில் புனரமைப்பு; கும்பாபிேஷகம் முடிந்த 8 மாதத்தில் கலசங்கள் கீழே விழுந்தன
வந்தவாசி, வந்தவாசி அருகே, அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலில் தரமற்ற நிலையில் புனரமைப்பு பணி நடத்தப்பட்டு, கும்பாபிேஷகம் நடந்ததால், 8 மாதங்களில் கோவில் கோபுர கலசங்கள் இடிந்து விழுந்து சேதமாகின.திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வென்குன்னறம் கிராமத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, அகிலாண்டேஸ்வரி சமேத கைலாசநாதர் கோவில் புனரமைக்கப்பட்டு கடந்த பிப்., 16ல், கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது. இந்நிலையில், கோவில் புனரமைப்பு பணிகள் தரமற்ற முறையில் செய்யப்பட்டதால், கோபுரத்தில் உள்ள இரு கலசங்கள் உடைந்து கீழே விழுந்தன. மேலும் கோவில் சுவற்றில் பூசப்பட்ட பெயின்ட் உதிர்ந்து சுவர் பொலிவிழந்து வருகிறது.கோவில் வளாகத்தில் உள்ள தரைகள் குண்டும், குழியுமாக சேதமடைந்துள்ளன. மின் ஒயர்கள் செல்லும் பைப்கள் உடைந்த நிலையில் உள்ளன. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோவில்களில் கும்பாபிேஷகம் நடத்தப்படும் நிலையில், கும்பாபிேஷகம் செய்த, 8 மாதங்களில் கோவில் புனரமைப்பு பணி முழுவதும் சேதமடைந்துள்ளதை கண்டு, அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.