உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / திருவண்ணாமலை தீப திருவிழா: நாளை மஹாதீபம்

திருவண்ணாமலை தீப திருவிழா: நாளை மஹாதீபம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில், மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, 4ம் தேதி தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தீபதிருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை, பஞ்ச பூதங்கள், 'ஏகன், அனேகன்' என்பதை விளக்கும் வகையில், அதிகாலை, 4:00 மணிக்கு, சுவாமி கருவறை எதிரில் பரணி தீபமும்; 'அனேகன், ஏகன்' என்பதை விளக்கும் வகையில் மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது.மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரை, 4,500 கிலோ நெய், 1,000 மீட்டர் காடா துணியால் ஆன திரி உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன.விழாவை முன்னிட்டு, சுவாமி சன்னதி முழுவதும் பூக்களால் தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. கோவில் வளாகம் முழுவதும், வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.கோவில் வளாக கலையரங்கில் சமய சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகளும், ஆன்மிக பாடல்களும் ஒலித்தவாறு, தீபதிருவிழா களை கட்டியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ