உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / ஆசிரியர் நியமிக்க கோரி மாணவர்கள் ஸ்டிரைக்

ஆசிரியர் நியமிக்க கோரி மாணவர்கள் ஸ்டிரைக்

திருச்சி:திருச்சி மாவட்டம், ஜம்புநாதபுரம் அருகே உள்ள துளையாநத்தம் கிராமத்தில், அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு, 53 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். பள்ளியில், தலைமை ஆசிரியர் மற்றும் மூன்று ஆசிரியர்கள் இருந்தனர். இதில், ஒரு ஆசிரியர் பணி மாறுதலாகி சென்று விட்டார். தற்சமயம், இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளதால், ஒரு ஆசிரியரை பணியமர்த்த வலியுறுத்தி, நேற்று காலை, பள்ளி மாணவ - மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பள்ளிக்கு வெளியே நின்று, வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம், கல்வித்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தி, விரைவில் ஆசிரியர் நியமிக்கப்படுவார் என்று உறுதியளித்ததால், மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு, வகுப்புகளுக்கு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை