நீர் நிலைகளை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் இல்லை
அணைக்கட்டு: ''நீர்நிலைகளை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் எதுவும் இல்லை,'' என, அமைச்சர் துரைமுருகன் கூறினார்.வேலுார் மாவட்டம், அணைக்கட்டில் நேற்று முன்தினம், புதிய டி.எஸ்.பி., அலுவலகத்தை திறந்து வைத்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது: காவிரியாற்றின் குறுக்கே ஆதனுார் - குமாரமங்-கலம் தடுப்பணை, புகலுார் கதவணை திட்டம் கிடப்பில் போட்-டது குறித்து, கொஞ்சம் கூட ஆதாரம் இல்லாமல் இ.பி.எஸ்., பேசியுள்ளார். இது சரியாக ஆய்வு செய்யாமல், இடத்தை தேர்வு செய்து, அவரால் தொடங்கப்பட்டது. அத்திட்டத்தை செயல்ப-டுத்த மறு ஆய்வு செய்யவே, பாதிப்பணம் போய் விட்டது. இதை அவர், சட்டசபையில் பேசட்டும், நான் சரியான பதில் அளிக்கிறேன். நீர்நிலைகளை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் எதுவும் இல்லை. இவ்வாறு, அவர் கூறினார்.