உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நகை திருடிய ஆசாமிகளுக்கு வலை

நகை திருடிய ஆசாமிகளுக்கு வலை

கள்ளக்குறிச்சி : வரஞ்சரம் அடுத்த ஈயனூர் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மனைவி ராஜ லட்சுமி(31). இவர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்கிறார். இவர் கடந்த 11ம் தேதி இரவு வேலைக்கு சென்றுள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்த போது மர்ம ஆசாமிகள் வீட்டின் கதவை உடைத்து பீராவிலிருந்த 9 பவுன் நகை, 54 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றது தெரிந்தது. மொத்த மதிப்பு 1 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் ஆகும். வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி