உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நாய் கடித்து குதறி 5 ஆடுகள் சாவு சேத்தியாத்தோப்பு அருகே பரபரப்பு

நாய் கடித்து குதறி 5 ஆடுகள் சாவு சேத்தியாத்தோப்பு அருகே பரபரப்பு

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே மேய்ச்சலுக்கு சென்றபோது, நாய்கள் கடித்து குதறியதில் 5 ஆடுகள் இறந்தன.சேத்தியாத்தோப்பு அருகே வாழைக்கொல்லை கிராம மக்கள் ஆடுகள் வைத்து வளர்த்து வருகின்றனர். வீராணம் ஏரியின் மேல்கரை மற்றும் வயல்களில் மாலை நேரங்களில் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகளை அங்கு சுற்றித்திரியும் 10க்கும் மேற்பட்ட நாய்கள் கடித்து குதறி கொன்று விடுவது தொடர்ந்து வருகிறது.இந்நிலையில் நேற்று காலை மேய்ச்சலுக்கு சென்ற சூர்யா என்பவரது ஆடுகளை நாய்கள் கடித்து குதறியதில், 5 ஆடுகள் இறந்தன.இறந்த ஆடுகளை, கால்நடைத்துறை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ