உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் 

போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் 

திண்டிவனம்: சிங்கனுார் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் திண்டிவனம் அதேகொம் பெண்கள் கண்ணிய மையம் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.முகாமிற்கு, திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கிருபாலட்சுமி தலைமை தாங்கினார்.விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக ஆலோசகர் முருகன், பள்ளி தலைமை ஆசிரியர் மணிமேகலை முன்னிலை வகித்தனர். அதேகொம் பெண்கள் கண்ணிய மைய ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி வரவேற்றார். முகாமில் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் பற்றி விளக்கி கூறப்பட்டது. பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் பாலச்சந்தர், ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர். உளவியல் ஆலோசகர் எட்டியப்பன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ