உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனம் அரசு கலைக்கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு

திண்டிவனம் அரசு கலைக்கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு

திண்டிவனம் : திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்தது.தமிழகமெங்கும் உள்ள அரசு கலைக்கல்லுாரியில் கடந்த 29 ம் தேதி மாணவர் சேர்க்கைக்கான முற்கட்ட கலந்தாய்வு துவங்கியது.இதேபோல் திண்டிவனத்தி லுள்ள அரசு கல்லுாரியில், முதற்கட்டமாக சிறப்பு பிரிவிற்கான கலந்தாய்வு துவங்கியது.இந்நிலையில் கல்லுாரியில் நேற்று முன்தினம் பி.எஸ்.சி., பட்டப்படிப்பில், கணிதம், வேதியில், தாவரவியல், புள்ளியில் உள்ளிட்ட பட்டப்படிப்பிற்கான கலந்தாய்வு நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த 500க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர் இதில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்னர்.இதேபோல் நேற்று வணிகவியல் மற்றும் பி.பி.ஏ., பட்டப்படிப்பிற்கான கலந்தாய்வு நடந்தது. இதில் 300க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். கல்லுாரி முதல்வர் ரவீந்திரன் தலைமையில், 3 பேர் கொண்ட மாணவர் சேர்க்கை குழு முன்னிலையில் கலந்தாய்வு நடந்தது.இன்று (12ம் தேதி) பி.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு பட்டப்படிப்பிற்கான கலந்தாய்வு நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை