உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / 2 குழந்தைகளை கடலில் வீசி கொலை செய்த தந்தை கைது

2 குழந்தைகளை கடலில் வீசி கொலை செய்த தந்தை கைது

மரக்காணம்:விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த கூனிமேடு கடற்கரையில் நேற்று காலை, 5:30 மணி அளவில் ஒரு வயது பெண் குழந்தை உடலும், அனுமந்தைக்குப்பம் கடற்கரையில், 4 வயது பெண் குழந்தையின் உடலும் அடுத்தடுத்து கரை ஒதுங்கின. கிராம மக்கள் பார்த்தபோது, இறந்து கிடந்த இரு குழந்தைகளும், கூனிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்த ஆனந்தவேலு, 33, என்பவரின் குழந்தைகள் என, தெரியவந்தது.ஆனந்தவேலுவை மொபைல் போனில் தொடர்பு கொண்ட போது, போன் 'சுவிட்ச் ஆப்' ஆகியிருந்தது. மரக்காணம் போலீசார் விரைந்து இரு குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பினர்.வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில், புதுச்சேரி, ரெயின்போ நகரில் ஒரு வீட்டில் நடந்த விபசாரத்தில் புரோக்கராக செயல்பட்டதாக ஆனந்தவேலுவின் மனைவியை, பெரியக்கடை போலீசார் கடந்த, 10ம் தேதி கைது செய்துள்ளனர்.இதனால், அவமானம் தாங்காமல் ஆனந்தவேலு, அன்று இரவே தன் குழந்தைகளுடன் காலாப்பட்டு வீட்டில் இருந்து வெளியேறி, கூனிமேட்டில் உள்ள வீட்டிற்கு வந்ததும், மறுநாள் வெளியில் செல்வதாக கூறிவிட்டு, குழந்தைகளை அழைத்து சென்றவர், அன்று இரவு தன் தந்தை ஆறுமுகத்திற்கு போன் செய்து, 'அவமானத்தை தாங்க முடியவில்லை. குழந்தைகளுடன் கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்' என, கூறிவிட்டு போனை துண்டித்ததும் தெரிய வந்தது. தலைமறைவான ஆனந்தவேலுவை நேற்று மாலை பிடித்த போலீசார், அவரிடம் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை