மேலும் செய்திகள்
மகன் மாயம்: தாய் புகார்
05-Sep-2024
விழுப்புரம்: விழுப்புரத்தில் வேன் டிரைவர் தற்கொலை செய்துகொண்டார்.விழுப்புரம் சித்தேரிக்கரை ராகவேந்திரா தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன்,46; வேன் டிரைவர். இவரது மகன் பாலசுப்ரமணி,16; சரியாக படிக்காமல் சுற்றி வந்ததால், மன வருத்தத்துடன் இருந்த ராமச்சந்திரன், கடந்த 13ம் தேதி வீட்டில் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அங்கிருந்தவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கி சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் இறந்தார். விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
05-Sep-2024