உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரங்க பூபதி கல்லுாரியில் பட்டமளிப்பு விழா 

ரங்க பூபதி கல்லுாரியில் பட்டமளிப்பு விழா 

செஞ்சி : ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி நர்சிங், ஸ்ரீரங்க சின்னம்மாள் கல்லுாரியில் நர்சிங் மற்றும் பி.எட்., மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.விழாவிற்கு, செயலாளர் ஸ்ரீபதி தலைமை தாங்கினார். இயக்குனர் சாந்தி முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் கோவிந்தராஜ் வரவேற்றார். தாளாளர் ரங்கபூபதி மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். கல்வி இயக்குனர் மணிகண்டன், ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் சிவசங்கரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.கல்லுாரி முதல்வர்கள் சசிகுமார், செந்தில்குமார் தொகுத்து வழங்கினர். பேராசிரியர்கள்நந்தாபாய், சர்தாஜ், மாலதி மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். விழாவல், 600 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்