மேலும் செய்திகள்
நுாதனமாக மதுபாட்டில்கள் கடத்திய ஆசாமி கைது
16-Feb-2025
திண்டிவனம்: புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். திண்டிவனம் போலீசார் நேற்று முன்தினம் மேம்பாலத்தில் ரோந்து சென்றனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் வந்தவாசியைச் சேர்ந்த பாண்டியராஜன், 36; என்பதும், பையில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து பாண்டியராஜனை கைது செய்து, 96 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
16-Feb-2025