உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது

சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது

விழுப்புரம்: விழுப்புரத்தில் சாராய வியாபாரி தடுப்புக் காவல் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.விக்கிரவாண்டி அடுத்த விஸ்வரெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி மகன் சிவக்குமார், 25; இவர், கடந்த 22ம் தேதி தொரவி கிராமத்தில் உள்ள நாடகமேடை அருகே சாராயம் விற்பனை செய்த போது, விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் கைது செய்து கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.இவர் மீது, விழுப்புரம் மதுவிலக்கு அமல்பபிரிவில் சாராயம் விற்பனை, கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குகள் நிலுவையில் உள்ளது.இவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, அவரை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய, எஸ்.பி., தீபக் சிவாச், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் பழனி உத்தரவின் பேரில், நேற்று விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார், சிவக்குமாரை, தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட உத்தரவு நகலை, கடலுார் மத்திய சிறைச்சாலை அதிகாரியிடம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை