உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திருவக்கரை கோவிலில் பவுர்ணமி ஜோதி தரிசனம்

திருவக்கரை கோவிலில் பவுர்ணமி ஜோதி தரிசனம்

வானுார்: திருவக்கரை கோவிலில் பவுர்ணமி ஜோதி தரிசனம் நடந்தது.வானுார் அடுத்த திருவக்கரை கிராமத்தில் பிரசித்தி பெற்ற வக்ரகாளியம்மன், சந்திரமவுலீஸ்வரர் என தனித்தனி கோவில்கள் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் பவுர்ணமி விழா நடந்தது. விழாவை முன்னிட்டு, அன்று காலை 6:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.மாலை 6.00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள வக்ரகாளியம்மன், சந்திரமவுலீஸ்வரர், வரதராஜ பெருமாள், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிகளுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.நள்ளிரவு 12:00 மணிக்கு பவுர்ணமியை முன்னிட்டு ஜோதி தரிசன வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை அறநிலையத்துறை செயல் அலுவலர் சிவக்குமார், உதவி ஆணையாளர் சந்திரன், ஆய்வாளர் உமாமகேஸ்வரி செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை