நோயாளிகளுக்கு பிரட் வழங்கல்
திண்டிவனம் : திண்டிவனம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பிரட், பிஸ்கெட் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மேல்மருவத்துார் பங்காரு அடிகளாரின் 85வது பிறந்த நாளையொட்டி, திண்டிவனம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் 200 பேர்களுக்கு பிரட், பிஸ்கெட், பழம் வழங்கப்பட்டது.விழுப்புரம் கிழக்கு பகுதி மாவட்ட மன்ற துணைத் தலைவர் சுகுமார், மகளிர் அணி செயலாளர் சுகுணா, இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் உட்பட பலர் பங்கேற்றனர்.