உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இந்தி தேர்வுக்கு சிறப்பு பயிற்சி முகாம்

இந்தி தேர்வுக்கு சிறப்பு பயிற்சி முகாம்

விழுப்புரம்: விழுப்புரம் மகாராஜபுரம், வி.பி.எஸ்., மெட்ரிக் பள்ளியில், இந்தி பயிற்சி முகாம் நடந்தது.தட்சிண பாரத் இந்தி பிரசார சபா சார்பில் நடைபெறும் முகாமிற்கு பள்ளி தாளாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் கணேஷ் முன்னிலை வகித்தார். இந்தி பிரசார சங்கத் தலைவர் நாகலட்சுமி வரவேற்றார்.முகாமில், 20க்கும் மேற்பட்ட பயிற்சி ஆசிரியர்கள், தேர்வுக்கு தயார் செய்யும் முறைகள், அதிக மதிப்பெண் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கினர். காலை முதல் பிற்பகல் வரை நடைபெற்ற முகாமில் 150 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ