வி.சி.,கட்சி ரத்ததான முகாம்
திண்டிவனம்: திண்டிவனம் வால்டர் ஸ்கேடர் மேல்நிலைப்பள்ளியில் ரத்ததான முகாம் நடந்தது. வி.சி., தலைவர் திருமாவளவனின் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த முகாமிற்கு நகரத் துணைச் செயலாளர் முகிலன் தலைமை தாங்கினார். முகாமை விழுப்புரம் மாவட்ட செயலாளர் திலீபன் துவக்கி வைத்து பேசினார். முகாமில் மாநிலத் துணைச் செயலாளர் வடிவேலு மாவட்ட அமைப்பாளர் இளஞ்சேரன் நிர்வாகிகள் வேந்தன், புரட்சிகண்ணன், சக்திவேல், அப்பு, ஏழுமலை, விஷபதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.