உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / டாஸ்மாக்கில் தகராறு 2 பேர் கைது

டாஸ்மாக்கில் தகராறு 2 பேர் கைது

செஞ்சி: செஞ்சி அருகே டாஸ்மாக் கடையில் கடனாக பிராந்தி கேட்டு தகராறு செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் அந்தோணி லிவிங்ஸ்டன், 29, சகாயராஜ், 34; இருவரும் நேற்று முன்தினம் மாலை பாலப்பாடி டாஸ்மாக் கடையில் கடனாக பிராந்தி பாட்டில் கேட்டனர். விற்பனையாளர் நாராயணன் தர மறுத்ததால், அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.டாஸ்மாக் மேலாளர் ஸ்டாலின், 54; அளித்த புகாரின் பேரில், நல்லாண்பிள்ளை பெற்றாள் போலீசார் வழக்கு பதிந்து, அந்தோணி லிவிங்ஸ்டன், சகாயராஜ் ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை