உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது

கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் கத்தியை காட்டி மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் விக்கிரவாண்டி கடை வீதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.அதில் இருவரும், கடந்த வாரம் கடை வீதியில் பைக்கில் செல்லும் போது கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டி சென்றது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, ஆர்.சி மேலக்கொந்தையைச் சேர்ந்த கிரிராஜன், 20: ஆவுடையார்பட்டை சேர்ந்த ரீகன்ராஜ், 21; ஆகிய இருவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை