சூதாடிய 6 பேர் கைது : 7 பைக்குகள் பறிமுதல்
விக்கிரவாண்டி:விழுப்புரம் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். கெடார் அடுத்த விநாயகபுரம் பகுதியில் நேற்று மதியம் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, வயல்வெளியில் பணம் வைத்து சூதாடிய விழுப்புரம், வி.மருதுார் வெங்கடேசன், 38; குபேந்திரன், 20; வெங்கடேசன், 28; சிந்தாமணியைச் சேர்ந்த ரவி, 52; பண்ருட்டி, மணப்பாக்கம் பத்மநாபன், 42; உளுந்துார்பேட்டை பிரபு, 32; ஆகிய 6 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 30 ஆயிரத்து 700 ரூபாய் மற்றும் 7 பைக்குகளை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய பத்மநாபன், செல்வம், ராஜ் குமார், அய்யனார் ஆகியோரை தேடி வருகின்றனர்.