உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  செஞ்சி பேரூராட்சியில் சாலை அமைக்க பூமி பூஜை

 செஞ்சி பேரூராட்சியில் சாலை அமைக்க பூமி பூஜை

செஞ்சி: செஞ்சியில் ரூ.18.50 லட்சம் மதிப்பில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி துவக்கி வைத்தார். செஞ்சி பேரூராட்சி 17வது வார்டில் ரூ. 18.50 லட்சம் மதிப்பில் கழிவு நீர் கால்வாய், சிமெண்ட் சாலை அமைக்கும் பணி துவக்க நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி பூமி பூஜை செய்து பணியை துவங்கி வைத்தார். இதில் கவுன்சிலர்கள் மோகன், பொன்னம்பலம், நூர்ஜகான் ஜாபர், அஞ்சலை நெடுஞ்செழியன், டாக்டர் முத்துவேல், நிர்வாகிகள் செந்தில், பன்னீர்செல்வம், ராஜ்குமார் முன்னாள் கவுன்சிலர் எல்லப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை