உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தீக்காயமடைந்த பெண் சாவு

தீக்காயமடைந்த பெண் சாவு

விழுப்புரம் : காஸ் சிலிண்டர் பற்ற வைத்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். விழுப்புரம் அடுத்த கரைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா மனைவி சவுதாரா, 45; இவர், கடந்த 23ம் தேதி வீட்டில் காஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது புடவையில் தீ பற்றியதில், சவுதாரா படுகாயமடைந்தார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று அதிகாலை இறந்தார். வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !