தந்தையை தாக்கிய மகன் மீது வழக்கு
அவலுார்பேட்டை : மேல்மலையனுார் அருகே தந்தையை தாக்கிய மகன் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.ஆத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சேகர், 53; இவரது மகன்கள் கலைச்செல்வன், 28; தமிழ்ச்செல்வன், 26; கடந்த 21ம் தேதி மாலை 6:30, மணிக்கு சேகருக்கும் அவரது மகன் தமிழ்ச்செல்வனுக்கும் இடையே கடன் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தமிழ்ச்செல்வன் தந்தையை தாக்கினார். படுகாயமடைந்த சேகர் வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.புகாரின் பேரில் அவலுார்பேட்டை போலீசார் தமிழ்ச்செல்வன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.