மேலும் செய்திகள்
பா.ம.க.,வினர் 4 பேர் மீது வழக்கு
06-Mar-2025
விழுப்புரம்: விழுப்புரத்தில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக பா.ஜ., வினர் 45 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.வளவனுார் மார்க்கெட் பஸ் நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் மாலை, அனுமதியின்றி பா.ஜ.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜ., ஓ.பி.சி., அணியைச் சேர்ந்த மோனிஷா மணி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேர் மீது, வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்தனர்.இதே போல், விழுப்புரம் காந்தி சிலை சந்திப்பில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட நகர தலைவர் வடிவேல் பழனி தலைமையில் 30 பேர் மீது, விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்தனர்.
06-Mar-2025