அண்ணனை தாக்கிய தம்பி மீது வழக்கு
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கொட்டப்பாக்கத்துவேலியை சேர்ந்தவர் முருகன், 49; கூலி தொழிலாளி. இவரது தம்பி சண்முகம், 37; என்பவர் தினந்தோறும் குடித்துவிட்டு அப்பகுதியில் வீண் தகராறு செய்து வந்தார். இதையடுத்து, சண்முகத்திற்கு, நேற்று அண்ணன் முருகன் அறிவுரை கூறினார். இதனால், ஆத்திரமடைந்த சண்முகம், முருகனை திட்டி தாக்கி மிரட்டல் விடுத்தார். விழுப்புரம் தாலுகா போலீசார், சண்முகம் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.