உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தந்தையை தாக்கிய மகன் மீது வழக்கு

தந்தையை தாக்கிய மகன் மீது வழக்கு

விழுப்புரம்; தந்தையை தாக்கிய மகன் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். விழுப்புரம், பாத்திமா லே அவுட்டை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி, 73; விவசாயி. இவரது மகன் சதீஷ்,43; பூந்தோட்டம் பகுதியில் வசித்து வருகிறார். இவர் மண்ணாங்கட்டி பெயரில் உள்ள 60 சென்ட் நிலத்தை தனது பெயருக்கு எழுதி தரும்படி கேட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த, 25ம் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, சதீஷ், தனது தந்தை மண்ணாங்கட்டியை திட்டி, தாக்கியுள்ளார். இது குறித்து, மண்ணாங்கட்டி அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் சதீஷ் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை